தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 6009 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 279 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3330 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று 219 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,824 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,29,670 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 13,254 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 526 பேரில் ஆண்கள் 360 பேர், பெண்கள் 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் மிகவும் அதிகமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் பாதிப்பும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இதனை கண்டு மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தற்போது கொரோனா வார்டில் 4,664 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் 67 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அங்கு மொத்த எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டில் மேலும் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…