Associate Professor suspended [Image source : file image ]
மதுரை அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சையது தாகிர் உசேன் என்பவர் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர், தனது மயக்கவியல் வகுப்பின் பொழுது மாணவிகளிடம் தகாத முறையில் பேசியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் 41 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாகா கமிட்டி அமைத்து முறைப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்த விசாரணையில் சையது தாகிர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியதும், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் படி நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விசாகா கமிட்டி விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குநருக்கு அனுப்பியதை அடுத்து, துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…