#BREAKING: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கார் பரிசு வழங்க தடை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். பின்னர் கண்ணன் மோசடியில் ஈடுபட்டதாக 9 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பது குறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முடிவு செய்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025