#BREAKING: அயோத்தியா மண்டபம் – தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும்!

Published by
பாலா கலியமூர்த்தி

அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்துவதற்கான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்திற்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தலாம். குற்றசாட்டு குறித்த ஆதாரங்களை வழங்கி, சாட்சியங்களை விசாரித்து ஆட்சேபங்களை பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த மண்டபத்தில் தினசரி பூஜை நடைபெறுகிறது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு முறையான கணக்குகள் இல்லை என்று ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் செயலாளர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் 2013-ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்து, அறநிலையத்துறை வசம் ஒப்படைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2013-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது சரியானது தான் என்று உத்தரவிட்டார். இதன்பின் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் விரிவான உத்தரவை நாளை காலை பிறப்பிக்கிறது நீதிமன்றம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

6 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

7 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

7 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

9 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

9 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

10 hours ago