#Breaking-சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10000-ஐ தாண்டியது!

சென்னையில் ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10,576ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று புதிதாய் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. இன்று 8 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,844 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும், 5653 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.