திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது.
சென்னையில் சாலை அமைக்கும் பணியின் போது, ஒப்பந்ததாரர்களுடன தகராறு செய்து, அதை நிறுத்திய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பறக்கும்படை பொறியாளரை, தாக்கியதாக கே.பி.சங்கர் மீது புகார்கள் எழுந்த நிலையில், கே.பி.சங்கர் கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக, திமுக பொதுச்செயலாளர் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று தன் மீதான குற்றசாட்டு குறித்து திமுக தலைமையிடம் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து, மாநகராட்சி பொறியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.எல்.ஏ சங்கர் சார்பிலும் தனியாக புகாரை அளிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…