#Breaking:திமுக பிரமுகர் வெட்டிக்கொலை – 5 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Default Image

சென்னை:பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் சௌந்தரராஜன்.இந்த நிலையில்,சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் நேற்று வெட்டிகொலை செய்யப்பட்டார்.பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு சௌந்தரராஜன் தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.

சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்:

இதனைத் தொடர்ந்து,பேருந்து நிலையத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக எஸ்பிளனமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதனடிப்படையில் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது கொலையாளிகள் ஆட்டோவில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

5 பேர் நீதிமன்றத்தில் சரண்:

இந்நிலையில்,திமுக பிரமுகர் சௌந்தரராஜன் கொலை வழக்கில் கார்த்திக் குமரேசன்,சதீஷ், இன்பா,அதிமுக பிரமுகர் கணேஷன்  மற்றும் அவருடைய மகன் தினேஷ் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.மேலும்,இந்த கொலை வழக்கு தொடர்பாக வசந்த குமார் என்பவர் கைதாகியுள்ளார்.

கொலைக்கான காரணம்:

பிராட்வே பேருந்து நிலையத்தில் இதற்கு முன்பாக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சௌந்தரராஜன் இணைந்த பிறகு,திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார்.இதனால்,அதிமுக பிரமுகர் கணேஷனுக்கும்,சௌந்தரராஜன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில்,சௌந்தரராஜன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 08052025
Central government orders OTT platforms
Pakistan issues security alert
S-400
Union minister Jaishankar
Union minister Rajnath singh say about Operation Sindoor