#BREAKING: அசைவ உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் – போக்குவரத்துத்துறை

Published by
பாலா கலியமூர்த்தி

‘உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை.

அசைவ உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழக அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்துறை டெண்டரில் சைவ உணவகங்களில் மட்டுமே பங்கேற்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துறையின் செயல்பாடு ஒருவரது உணவு உரிமையில் தலையிடும் செயல் என எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளில் சைவ உணவு என்ற வார்த்தை நீக்கம் செய்யயப்பட்டது.

தரமற்ற உணவகங்களில் ஓட்டுநர், நடத்துனர் பேருந்துகளை நிறுத்துவதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. இந்த நிலையில் தொலைதூர அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கான ஓட்டல்களை முடிவு செய்ய பகிரங்க போட்டியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, ஓட்டல்களுக்கான நிபந்தனைகளை தமிழக போக்குவரத்துறை நேற்று வெளியிட்டிருந்தது.

இருப்பினும், போக்குவரத்துறை வெளியிட்ட அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வீதியில் திருத்தும் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துறை நிபந்தனையை நீக்கியதால் அரசு பஸ் நிற்கும் ஓட்டலில் சைவ, அசைவ உணவுகளை தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago