#BREAKING: காவலர் தேர்விலும் ‘தமிழ் தகுதி தேர்வு’ கட்டாயம் – தேர்வாணையம் அறிவிப்பு

Published by
Castro Murugan

தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காவலராக முடியும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

காவல் பணிக்கான எழுத்து தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காவலராக முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சில அரசு ரீதியிலான தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், தற்போது காவலர் பணிக்கான எழுத்து தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்ட்டுள்ளது.

தமிழ் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவல் பணிக்கான எழுத்து தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் காவலர்களுக்கான தேர்வுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதேபோல உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வும், இந்த தேர்வாணையம் நடத்தி வருகிறது.

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

24 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

54 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

3 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago