மசாஜ் நிலையங்களில் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மசாஜ் நிலையம் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து, உரிமையாளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்ததது நீதிமன்றம். இந்த தடையை நீக்கக்கோரி காவல்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் போலீஸ் தலையிட முடியாது என்றும் விபச்சார தடுப்பு அதிகாரிக்கு தான் சோதனை நடத்த உரிமை உள்ளது. உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் இல்லை எனவும் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தரப்பு கூறுகையில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும்போது, காவல்துறை வேடிக்கை பார்த்து பார்த்துக்கொண்டிருக்காது என தெரிவித்ததை அடுத்து, மசாஜ் நிலையங்களில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனை மேற்கொள்ள உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…