கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரையும் கடந்த 21-ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை இருவரையும் 10 நாள்கள் மட்டுமே விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதிகொடுத்தது. இதையெடுத்து போலீசார் தீவிரவாதிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அப்துல் சமீம், தவுபிக் இருவரும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து தமிழக போலீசார் அப்துல் சமீம், தஃபீக் இருவரையும் கேரளா அழைத்து சென்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…