#BREAKING: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றம்!.. வேந்தராக முதல்வர்!

Published by
பாலா கலியமூர்த்தி

சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருப்பார் என சட்டப்பேரவையில் அறிவிப்பு.

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் முக ஸ்டாலினும், இணை வேந்தராக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் மாற்றம் செய்யபட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகே அமைக்கப்பட உள்ளது. இதற்கான துணை வேந்தர், மற்ற பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் வரும் காலங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த

தமிழக அரசின் சட்டப்பேரவை செயலகம் மூலமாக, சட்டத்துறை இந்த மசோதாக்களான கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று. இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 15க்கும் மேற்பட்ட சட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும்போது, இன்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

2 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

3 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

4 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

5 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

13 hours ago