திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடத்த 2013-ஆம் ஆண்டு திண்டுக்கல் திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்ததாக அவர் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இதன் பின் ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கின் விசாரணைக்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைகாலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் , மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது.எம்.பி. ,எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…