#BREAKING : தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு தமிழக அரசு அனுமதி

Published by
Venu

 நாளை முதல்  தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.ஆனால் மே 3- ஆம் தேதிக்கு பிறகு 3 -ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.சில தளர்வுகள் மட்டும் இந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.

 தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட  பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இதனிடையே நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும்.  விவரங்கள் இதோ…

1.டீ கடைகள் (பார்சல் மட்டும் ) 

2.பேக்கரிகள் (பார்சல் மட்டும் )

3.உணவகங்கள் (பார்சல் மட்டும் ) 

4.பூ,பழம்,காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் 

5.கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் 

6.சிமெண்ட்,ஹார்டுவேர்,சானிடரிவேர் விற்கும் கடைகள்

7.மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

8.மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

9.கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

10.வீட்டு உபயோக இயந்திரங்கள்  மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் 

11.மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் 

12.கண்கண்ணாடி மற்றும்  பழுது நீக்கும் கடைகள் 

13.சிறிய நகைக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )

14.சிறிய ஜவுளி கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )

15.மிக்ஸி,கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள் 

16.டிவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் 

17.பெட்டி கடைகள் 

18.பர்னிச்சர் கடைகள் 

19.சாலையோர தள்ளுவண்டி கடைகள்

20.உலர் சலவையகங்கள்

21.கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

22.லாரி புக்கிங் சர்வீஸ்

23.ஜெராக்ஸ் கடைகள்

24. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள்  

25.இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள்

26.நாட்டு மருந்து விற்பனை கடைகள் 

27.விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள் 

28.டைல்ஸ் கடைகள் 

29.பெயிண்ட் கடைகள் 

30.எலக்ட்ரிக்கல் கடைகள்

31.ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் 

32.நர்சரி கார்டன்கள்

33.மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்

34.மரம் அறுக்கும் கடைகள்  

 

Published by
Venu

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

5 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago