டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சித்தாண்டி, பூபதி ஆகிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கைதான ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதியை பணியிடம் நீக்கம் செய்து சென்னை காவலர் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வை முறைகேடாக எழுதி பணியில் பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…