தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.அதன்பின்னர் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக,பாஜக வெளிநடப்பு செய்தது.
இதனைத்தொடர்ந்து,பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில்,வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசு கொண்டு வந்த இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதன்மூலம்,தெலங்கானா,கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்து வருவதைப்போன்று,இனி தமிழகத்திலும் அதே முறை பின்பற்றப்படவுள்ளது.
இதனையடுத்து,தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட 2022 தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா நேற்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்.கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா ஆளுநர் மாளிகையை சென்றடைந்தது.ஏற்கனவே,நீட் விலக்கு,மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் உள்ள நிலையில்,துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா ஆளுநர் மாளிகையை சென்றடைந்துள்ளது.இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…