தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.அதன்பின்னர் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக,பாஜக வெளிநடப்பு செய்தது.
இதனைத்தொடர்ந்து,பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில்,வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசு கொண்டு வந்த இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதன்மூலம்,தெலங்கானா,கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்து வருவதைப்போன்று,இனி தமிழகத்திலும் அதே முறை பின்பற்றப்படவுள்ளது.
இதனையடுத்து,தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட 2022 தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா நேற்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்.கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா ஆளுநர் மாளிகையை சென்றடைந்தது.ஏற்கனவே,நீட் விலக்கு,மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் உள்ள நிலையில்,துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா ஆளுநர் மாளிகையை சென்றடைந்துள்ளது.இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…