Bus Accident : கட்டுப்பாடின்றி ஓடிய அரசு பேருந்து.. வெளியில் குதித்த ஓட்டுநர் உயிரிழப்பு.! தப்பித்த பயணிகள்.!

Published by
மணிகண்டன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது. அப்போது அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் திடீரென்று பேருந்தில் இருந்து குதித்து பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டார். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த வித பெரிய காயங்களும் ஏற்படவில்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியன் எனும் 43 வயது நபர், அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பேருந்தை இயக்கி வந்துள்ளார். பேருந்தில் 30 பயணிகள் பயணித்து வந்துள்ளனர்.

அப்போது கொண்டமநாயக்கன்பட்டி எனும் ஊர் அருகே ஒரு பாலத்தை கடக்கும்போது பஸ் நிலை தடுமாறி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டியன் திடீரென பேருந்தில் இருந்து வெளியே குதித்து விட்டார். இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

நல்வாய்ப்பாக பேருந்தானது அருகில் உள்ள முள்வேலி, மரம் ஆகிவற்றின் மீது மோதி நின்றது. அதன் காரணமாக பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எந்த வித பெரிய அடியும் ஏற்படவில்லை. இதனை அடுத்து நடத்துனர் வினோத்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

28 minutes ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

1 hour ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

3 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

4 hours ago