திமுகவில் ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.ஆனால் அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், திமுகவில் அது போல் நடக்காது என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,3 முறை முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்துக்கு, தனது பதவியை விட்டுத்தர தயாரா என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் துரைமுருகன் கருத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.அவரது பதிலில், நாங்கள் ஒன்றும் மிட்டா மிராசு கிடையாது. அதிமுகவில் உழைப்புக்கு பலன் எப்போதும் கிடைக்கும்.அடிமட்ட தொண்டன் கூட கொடிகட்டிய காரில் பயணிக்க முடியும்.துரைமுருகன் முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே ? மு.க.ஸ்டாலின் அதற்கு அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…