வணிகத்துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்த சிபிஐ..!

புதுச்சேரியில்  இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம்  லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம்  புகார் கொடுக்கப்பட்டது. இந்த

Featured image

புதுச்சேரியில்  இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம்  லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம்  புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, 100 அடி சாலையில் உள்ள வணிக வரி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட  சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த அலுவலகத்தில் ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இன்று காலை முதல் வணிக வரி ஆணையர் முருகானந்தம்,  ஆனந்தன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்தனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் ரூ.10 லட்சம்  லஞ்சம் கேட்ட புகாரில்  வருமான வரி ஆலோசகர் சித்ரா, துணை ஆணையர்கள் ஆனந்தன், முருகானந்தம் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.