சிறுமி ஜெயஸ்ரீ கொலை.! சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மனு தள்ளுபடி.!

Default Image

ஜெயஸ்ரீ  கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்கக்கோரி  உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த அதிமுக நிர்வாகி முருகன் மற்றும் அதிமுக கிளை செயலாளர்  கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தெ ஜெயஸ்ரீயை  கட்டிப்போட்டுபெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். 

படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த மரண வாக்குமூலம் போலீஸார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எனவே தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி  உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில், காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக மனுதாரர் சுமதி விளக்கம் கொடுத்ததால், மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதித்தது. இதைதொடர்ந்து, சுமதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts