தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளளது.
கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் , யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. யானைகள் வளங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் சிலர் தந்தங்களுக்காக யானைகளை கொடூரமாக கொள்கின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு 84 யானைகள் உயிரிழந்தன. மேலும், தற்போதும் யானைகளின் உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் யானை இனமே அழியும் சூழ்நிலை ஏற்படலாம். ஆகையால் இதுகுறித்து சிபிஐ மற்றும் தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு விசாரிக்க உத்தரவிட கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஸ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடுவது ஏற்கத்தக்கதல்ல, யானைகளை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட துறை செயலாளருடன் ஆலோசித்து பதில் மனு தாக்கல் செய்த தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…