ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததற்காக ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்றை 2000 ஆம் வருடத்தில் சென்னையை சேர்ந்த காளியப்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிவடைந்ததால் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 கோடி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரரின் வழக்கறிஞர் இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாக கூறியிருந்தார். அதனால் பிரச்சனை முடிந்துவிட்டதா என்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞரை தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாவது, எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும் அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கூறியுள்ளார்.
மேலும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாவது, மனுதாரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.ஆர்.ரஹ்மானின் நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…