சேப்பாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தற்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
அந்த வகையில், சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்து, சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய நிலையில், அதற்கான வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.
இந்த சந்திப்பில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்கே சுதீஷ், உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனைதொடர்ந்து, சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, உதயநிதி ஸ்டாலின் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், சிபிஐ அலுவலகத்திற்கு சென்று மாநில செயலாளர்களை சந்திக்கவுள்ளதாகவும், இதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை வளசரவாக்கம் இல்லத்தில் சந்திக்கிறார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…