சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கி கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி இலங்கு, தீபா இவர்களது மகன் ஹரிஷ்வர்மன் வயது 7. ஹரிஷ்வர்மன் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார்.கொரோனாவின் இரண்டாவது அலையால் ஒட்டு மொத்த நாடே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் ரொக்கமாகவும் மருத்துவ பொருட்களாகவும் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை கொடுத்து வருகின்றனர்.
இதனை உணர்ந்த இந்த பிஞ்சு தான் சிறுக சிறுக உண்டியலில் சைக்கிள் வாங்க சேமித்திருந்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறியத்தொகையாக இருந்தாலும் சமூகத்தின் மேல் அந்த சிறுவனுக்கு இருந்த அக்கறை கண்டு மனம் நெகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதுமட்டுமில்லாமல் சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் புதிய சைக்கிள் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். மேலும், சிறுவன் ஹரிஷ்வர்மனுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக தொலைப்பேசி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…