நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி, இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி, ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசியதாக தகவல் கூறப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். இதன்பின் டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் பார்வையிடுகிறார். ஏப்.2-ம் தேதி மாலை 5 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…