குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசின் நிலைபாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறுகையில், குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்தி விட்டது.குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தினருக்கும் பாதிப்பு இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்கவேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு, இதுகுறித்து பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்ததை நம்பி ஈழத்தமிழர்கள் உயிர்நீத்தனர் .இலங்கை தமிழர்கள் குறித்துபேச திமுகவுக்கு தகுதி கிடையாது.கொறடா உத்தரவின்படி தான் அதிமுக எம்பிக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…