கோவையில் திமுக – பாஜக இடையே மோதல்! நடந்தது என்ன?

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: கோவையில் அண்ணாமலை பரப்புரையின்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்றிரவு பாஜக மாநில தலைவரும், ஆத்தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி திமுகவினர் காவல்துறையை நாடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கும் மேல் பிரச்சாரம் மேற்கொள்ள எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என கேட்டுள்ளனர்.

இதையடுத்து, திமுக – பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், பின்னர் காவல்துறை கூட்டத்தை கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது அண்ணாமலையின் பிரச்சார வாகனம் அங்கிருந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மோதலின்போது பாஜகவினர் தாக்கியதில் திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியை சேர்த்தவர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய வேண்டும் திமுக, சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மாசாணி, ஆனநதன், லட்சுமி செந்தில், ரங்ககநாதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை ஆவராம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்துக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

35 minutes ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

59 minutes ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

1 hour ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

2 hours ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

15 hours ago