குடையுடன் வந்தால் குவாட்டர்.! திருப்பூரில் அதிரடி .!

Default Image

குடை கொண்டு வந்தால் மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது.  இதையடுத்து மது கிடைக்காத விரக்தியில் மது பிரியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட  மதுக்கடை  நேற்று முன்தினம் டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற  பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது. 

தமிழகத்தில்  நாளை முதல் டாஸ்மாக் கடைகள்  திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், தடைசெய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடை கொண்டு வந்தால் மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்