தமிழக தலைவர்களை கொல்ல சதி.. சேலத்தில் தீவிரவாதிகள் பதுங்கள் NIA எச்சரிக்கை..

Published by
Kaliraj
  • நாகர்கோவில் தமிழகத்தில் வழியாக ஊடுருவி இந்து தலைவர்கள்-பிரமூகர்களை கொல்ல சதி
  • கேரளாவில்  பதுங்கி உள்ள தீவிரவாதிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து சிம்கார்டு சப்ளே

சேலம் அம்மாபேட்டியை சேர்ந்தவர் லியாகத் அலி இவர் ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பில் இருப்பதாகவும் , கேரள மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் சிலரை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து வருவதாக மத்திய தேசிய புலனாய்வு என்று அறியப்படும் NIA க்கு தகவல் கிடைத்தது.

Image result for தீவிரவாதி இந்தியா

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லியாகத் அலி வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது இதில் பல ரகசியங்கள் சிக்கியது.இந்நிலையில் லியாகத் கேரளாவில் கைது செய்யப்பட்டார். இவரை கேரளாவில் வைத்தே NIA போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அந்த விசாரணையில் லியாகத் அலிக்கு சேலத்தை சேர்ந்தவர்களான இப்ராகிம்,அப்துல்ரகுமான்,அன்பரசன் ஆகிய மூவரின் மூலமாக போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

இதில் ஒருவராக அப்துல்ரகுமான் வைத்துள்ள செல்போன் கடையில் 9 பேரின் போலி ஆவணங்கள் மூலமாக சிம்கார்டுகளை வாங்கி அதை கேரளாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு வழங்கியதாக தெரிகிறது.

போலி ஆவணங்கள் மூலம் ரெடியாகிய  சிம்கார்டுகளை அப்துல்ரகுமானிடம் இருந்து திருவிதாங்கோடுஅருகில் உள்ள அடைப்பு விளை பாதர் தெருவைசேர்ந்தவரன அப்துல்சலீம்,மற்றும் இளங்குடியை சேர்ந்த சையது நவாஸ்,கடலூரைச் சேர்ந்த காஜாமைதீன் ஆகிய மூவரும் சேலம் வந்து இந்த சிம்கார்டுகளை எல்லாம்  வாங்கிக்கொண்டு கேரளாவில் உள்ள லியாகத் அலியிடம் கொடுத்துள்ளனர்.லியாகத் அந்த சிம்கார்டுகளை தீவிரவாதிகளுக்கு கொடுத்துள்ளார்.

சிம்கார்டுகளை சப்ளே செய்ய வந்த அப்துல்சலீம்,சையது நவாஸ்,காஜாமைதீன் ஆகிய மூவரும் சேலத்தில் பதுங்கி இருப்பதாகவும் பயங்கிரவாதிகள் நாகர்கோவில் வழியாக தமிழகத்தில் ஊடுருவி இந்து தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனால் போலீசார் உசார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிலும் தொடர் தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.மேலும் வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது.

காவல்துறை வட்டாரங்கள் இவர்களை பற்றி தெரியவந்தால் 1512 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.சந்தேகப்படும் நபர்கள் என தெரியவந்தாலும் கட்டணமில்லா இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று  மக்களுக்கு தெரிவித்து வருகிறது.சேலத்தில் தீவிரவாதிகள் பதுங்கல் என்ற தகவலால் அம்மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

 

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago