ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் மற்றும் திருச்சியை சேர்ந்த நித்திய சௌமியா யானைகள் கொடூரமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் உயிரிழப்பு குறித்து குறித்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கடந்த ஐந்து ஆண்டுகளில் 13,000 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 60 யானைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு உயிர் இழந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள், ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க தடுப்பு சுவர்களை எழுப்புவதால் வேறு வழியில்லாமல் யானைகள் தண்டவாளங்களை கடக்கும் தங்கும் சூழ்நிலை ஏற்படுவதாகவும், யானைக்க உயிர் இழப்பை தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. யானைகள் பலியாவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு மற்றும் தெற்கு ரயில்வே தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…