தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து-மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

Published by
Edison

தடுப்பூசி குறித்த சர்ச்சையான கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார்.

இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,தடுப்பூசி போட்டுக் கொண்ட காரணத்தினால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார்.

இதனையடுத்து,பிரதமர் மக்கள் நல திட்டங்கள் விளம்பர அமைப்பின் செயலாளர் சோமு ராஜசேகரன் என்பவர்,நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது,உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல்,கலகம் செய்ய தூண்டிவிடுதல்,பேரிடர்  மேலாண்மை சட்டம்,தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

Published by
Edison

Recent Posts

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

48 minutes ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

1 hour ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

1 hour ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

2 hours ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

2 hours ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

2 hours ago