தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு பின்பற்றப்படுகிறது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்திலும் கொரோனா எண்ணிக்கைநாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்திலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வணிகர்கள் சங்கம், மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், தேனி நகர ஓட்டல்கள் சங்கம், தேனி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய சங்க நிர்வாகிகள் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைவரும் ஒன்றிணைந்து இன்று அதாவது ஜூலை 13 ஆம் தேதி முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…