கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் வாங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியேற்ற திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற அன்றைய தினமே குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார்.
இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது.
பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைய குறைய ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் பெறாதவர்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பு காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் ஜூலை 31 ஆம் தேதிக்குள் நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் பெற முடியாதவர்கள் ஜூன் 15, 2021 தேதியில் தகுதியுடன் கூடிய குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அவரவர்களுக்குரிய நியாயவிலை கடைகளின் மூலம் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகு, நியாய விலை கடைகளில் நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…