உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி கடைகளுக்கு வராததால் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் கறிக்கோழி, முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி, கோழிக்கறி, முட்டை சாப்பிட்டதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கூறினார். மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் விற்பனையாகாமல் நாமக்கலில் 15 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 4 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு வதந்தியே காரணம் என புகார் தெரிவித்தார். மேலும் ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.50 ஆக குறைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார். பின்னர் கோழிகளுக்கு கொரோனா தொற்று என தவறான கருத்துகளை பரப்பியவரை கைது செய்து நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என குறிப்பிட்டார். இதனிடையே கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதையும் வாங்கிலி சுப்பிரமணி சுட்டிக்காட்டினார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…