சென்னையில் 16 காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசியபோது, 200 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 7,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னையில் உள்ள 23 ஆயிரம் காவலர்களில் 16 காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கு அவகாசம் உள்ளதால் அதற்கேற்ப காவலர்கள் அடுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட காவலர்கள் சிலருக்கு கூட தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் 3,609 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் தற்போது 258 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். காவலர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பாதிப்பால் இதுவரை காவல்துறை சார்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…