இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 31 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 4,829 பேரில் 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. கொரோனா பரிசோதனை அதிகரிப்பதால் பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரு நாளில் 13,413 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 222 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…