கொரோனா பாதிப்பிலிருந்து கரூர் மீண்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 161 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 2323 ஆக உயந்தது. தமிழகத்தில்,கொரோனா பாதிப்பே ஏற்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. சமீபத்தில் ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்.
கொரோனாவால் கரூரில் 42 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றுமுன் தினம் வரை 41 பேர் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, மீதம் இருந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியதால் கரூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்நிலையில்,இன்று சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி கரூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் கடந்த 24-ம் தேதி சென்னையில் இருந்து கரூர் வந்துள்ளார். தற்போது அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…