கொரோனா வைரஸ் விவகாரம்… மருத்துவர்கள், செவிலியர்கள் வீடுகளுக்கு செல்ல தடை… மருத்துவ மனையிலேயே தங்க அறிவுறுத்தல்…

Published by
Kaliraj

கொரோனா வைரஸ் தொற்றுக்கு  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி, திரு. நாகராஜன் அவர்கள்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையளிக்க கூடியவர்களுக்கு, அந்த பாதிப்பு நேரடியாக பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே  அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
எனவே, சுழற்சி முறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணிய்யாளர்களை  வீட்டிற்கு அனுப்பக் கூடாது என்றும், அவர்களை, மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் இந்த உத்தரவு  கட்டாயம் அல்ல என்றும்,  விருப்பப்பட்டால் உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்லலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago