மதுரையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் எல்லிஸ் நகர் எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவரின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை மோசமடைந்து வருவதை அறிந்த அவர், தான் இறந்து விட்டால் தன்னை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யுமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, அவரது ஆசைப்படி அவரது மகளாகிய பெண் மருத்துவருடன் இணைந்து இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக இளைஞர்கள் சிலர் சேர்ந்து அவரது தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அருகிலேயே செல்ல அஞ்சும் இந்த காலத்தில் இறந்தவரின் உடலை பெண் மருத்துவரின் உதவியுடன் இறுதி ஆசை நிறைவேற அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்களின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…