கடலூர்:ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
விருதுநகரில்:
அண்மையில்,விருதுநகரில் 22 வயது பட்டியலின பெண் ஒருவர் திமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.இதனையடுத்து,குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,இந்த வழக்கு பொள்ளாச்சி சம்பவம் போன்று இருக்காது என்றும்,விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
பெண் மருத்துவர்:
அதே சமயம்,வேலூரில் நள்ளிரவு படம் பார்த்து நண்பருடன் ஆட்டோவில் எரிய பெண் மருத்துவரை கடத்தி சென்று நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை:
இந்நிலையில்,கடலூரில் ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது:
அதன்படி,கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(19 வயது),சபரி என்கிற கிஷோர் (19 வயது) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,பெண்ணின் ஆண் நண்பரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெண்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…