தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மளிகை கடைகள், காய்கறிகள் கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை திறக்கலாம் என்று, மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் இ-பதிவு பெற்று வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அவசரத் தேவைக்காக வெளியில் செல்பவர்கள் எந்த வாகனத்தில் செல்கிறார்கள் என்று பதிவு செய்து செல்ல முடியும். அதாவது ஆட்டோ, இருசக்கர வாகனம், பேருந்து, கார், வாடகை கார், இன்னோவா, எஸ்யூவி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அதைப் பதிவு செய்து செல்ல கூடிய வசதி, தற்போது அரசின் இ-பதிவு இணையதளத்தில் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…