நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்.
தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலைஞரின் உளியின் ஓசை, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களுக்காகத் தமிழ்நாடு அரசின் விருது, மகதீரா திரைப்படத்தில் பணியாற்றி தேசிய விருது எனப் பல விருதுகளை வென்றவரும்; தன் நடன இயக்கத்தால் எண்ணற்ற பாடல்களின் வெற்றிக்குப் பங்களித்தவருமான சிவசங்கர் மாஸ்டர் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் என்றே நம்பியிருந்த நிலையில் அவர் உயிரிழந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…