தமிழக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக அரசு, கர்நாடக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே விஸ்பரூபம் எடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதற்காக தமிழக அரசானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் , உச்சநீதிமன்றம், மத்திய அரசு வரை சென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்த 5 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதே போல தமிழகத்திலும், பல்வேறு பகுதிகளில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதனால், தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசு, தமிழக அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், திமுக அரசு, கர்நாடக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சிதம்பரம் உள்ளிட்ட வருவாய் மாவட்டங்களில் வரும் 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசிடம் தண்ணீரை பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மேலும், குறுவை சாகுபடி பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

17 minutes ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

54 minutes ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

1 hour ago

நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…

2 hours ago

“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பிரதேசம் :  இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…

3 hours ago

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…

3 hours ago