“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!
பாகிஸ்தான் ராணுவம் நினைத்து பார்க்காத பகுதிகளில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்தனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த இடங்கள் பாகிஸ்தான் ராணுவம் கூட எதிர்பார்க்காத பகுதிகள் என்று கூட சொல்லலாம். இந்திய வீரர்கள் துணிச்சலாகச் சென்று, துல்லியமாகத் தாக்கி, பயங்கரவாதிகளை ஒழித்தனர்.
இந்த வெற்றி, இந்திய ராணுவத்தின் பயிற்சியையும், வலிமையையும் உலகிற்கு காட்டியது மட்டுமின்றி நமது நாடு பாதுகாப்பில் உறுதியாக இருப்பதை இது நிரூபித்தது.எனவே, இந்திய ராணும் குறித்து பிரதமர் மோடி தொடர்ச்சியாகவே புகழ்ந்து பேசிக்கொண்டு வருகிறார். அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் “வீரத்தின் அடையாளம் குங்குமம்” என்று பேசினார்,
இது குறித்து அவர் பேசியதாவது ” வீரத்தின் அடையாளம் குங்குமம்” என்று குறிப்பிட்டு, இந்திய ராணுவத்தின் வீரத்தையும், பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களின் துணிச்சலான செயல்களையும் பாராட்டினார். குறிப்பாக, பாகிஸ்தான் எல்லையில், எதிர்பாராத பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அளித்தது. திறமையாக செயல்பட்ட இந்திய ராணுவத்திற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
பெண் சக்தியின் சின்னமான குங்குமம், இப்போது வீரத்தின் அடையாளமாக மாறிவிட்டது என கூறி பெண்களின் வலிமை மற்றும் தியாகத்தின் சின்னமாகக் குறிப்பிட்டு, அதை இந்திய வீரர்களின் தைரியத்துடன் ஒப்பிட்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய மதிப்புகளை ஒருங்கிணைத்தும் பிரதமர் மோடி பேசிவிட்டு சென்றார்.