காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் நடத்தப்பட்டது. அது முதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கிவிட்டது. […]
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர தாக்குதல்களுக்கும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் தான் தாக்குதல்கள் அதிகமாக இருக்கின்றன. நேற்று இரவு இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. அதனை இந்திய ராணுவம் முறியடித்து இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் […]
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. இராணுவ விதிகள் 1948 இன் விதி 33 இன் கீழ், எடுக்கப்பட்ட இந்த முடிவு, வழக்கமான இராணுவத்தை கூடுதலாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, இராணுவத் தளபதி இப்போது அனைத்து பிராந்திய இராணுவ அதிகாரிகளையும் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்களையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க அல்லது வழக்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு துணைபுரிய அழைக்கலாம். மேலும், நாட்டில் […]
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை நோக்கி பாகிஸ்தான் ஏவிய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்த அசாதாரண சூழல் குறித்து மத்திய அரசும் தொடர்ந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் , இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை. இங்கு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை பொதுவெளியில் பாதுகாப்பு […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் பகுதியில் எல்லை பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய […]
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இந்நிலையில், தங்களின் இரண்டு JF17 வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில எல்லையோரம், டாங்கி படையை பாகிஸ்தான் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அமைந்துள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் […]