PMK Leader Anbumani Ramadoss - Madras High court [File Image]
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி 35 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை விழாவாக நடத்த கடலூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டம் நாளை நெய்வேலி அருகே வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு அனுமதி கேட்டு கடலூர் மாவட்ட காவல்துறையிடம் பாமக கோரிக்கை வைத்து இருந்து. ஏற்கனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே பாமக போராட்டம் நடத்தி அதன் பின்னர் அது வன்முறையாக மாறிய காரணத்தால், நெய்வேலி டிஎஸ்பி பாமக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.
இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், கட்சி கூட்டத்தை நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும், அதில் காவல்துறை அச்சத்தை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்க முடியாது என்றும். இதனால், கடலூரில் பாமக கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் வேறு மாவட்டங்களில் வேண்டுமென்றால் காவல்துறை அனுமதியுடன் நடத்த அனுமதி என்றும் உத்தரவிட்டது. கடலூரை தவிர்த்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொள்ளவும் உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு பாமக மறுப்பு தெரிவித்தது. கடலூரை தவிர வேறு இடங்களில் நடத்த அனுமதி கோரப்போவதில்லை என்றும் மேல்முறையீடு செய்ய மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…