Photo Credit: B. Jothi Ramalingam
தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்.
நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வந்தது. அப்போது, பாமகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸை விடுவிக்கக்கோரி பாமகவினர் அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், பாமகவினர் கற்கள் வீசியதால் காவலர்கள் சிலர் காயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்பின் என்எல்சி நுழைவு வாயிலில் நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும் கூறப்பட்டது.
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், நெய்வேலியில் பாமக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளார். இதுதொடர்பாக டிஜிபி கூறுகையில், நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்தது.
சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீசார் மீதும், போலீசார் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என டிஜிபி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…