முழு ஊரடங்கு பகுதிகளில் நேரடி பார்சல் சேவை நிறுத்தம் .!

Default Image

முழு ஊரடங்கு பகுதிகளில் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு பார்சல்கள் வழங்கும் சேவை நிறுத்துவதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று வரை 1755 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உள்ளது.

இந்நிலையில், நாளை முதல் சென்னை , மதுரை ,கோவை போன்ற மாநகரில் உள்ளிட்ட  4 நாட்களுக்கும், சேலம், திருப்பூர் போன்ற மாநகரில் 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து , முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட  பகுதிகளில் அனைத்து ஓட்டல்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,பொதுமக்களுக்கு நேரடியாக உணவு பார்சல்கள் வழங்கும் சேவை நிறுத்துவதாகவும், உணவு தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தால் உணவு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்