விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.இதில் தற்போதைய நிலவரப்படி,திமுகவானது பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக கட்சியின் பொருளாளர் மற்றும் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த்,குறைந்த அளவிலான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதாவது,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் 25,323 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.தேமுதிக வேட்பாளர் பிரேமலதா 9902 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.இதற்கிடையே,பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன் 19,533 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…