அதிமுக மீது திமுக புதிய புகார்..!

அதிமுக செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றசாட்டியுள்ளது.
பணம் கொடுப்பதற்காக வாக்காளர்களின் அடையாள அட்டை, செல்போன் எண்களை அதிமுக சேகரிப்பதாக திமுக புகார் அளித்துள்ளது. செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றசாட்டியுள்ளது.
வாக்காளர்களின் அடையாள அட்டைகள், செல்போன் எண்களை அதிமுக திரட்டுவதை தடுக்க திமுக கோரிக்கை , வாக்காளர்கள் அடையாள அட்டைகளை அதிமுகவினரிடம் இருந்து பறிமுதல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே, போன் பே , போன்ற பணப்பட்டுவாடா செயலிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வலியுறுத்தியுள்ளது. மொத்தமாக மொபைல் செயலி மூலம் பணம் அனுப்புவதை தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் ஆர் எஸ் பாரதி மனு அளித்துள்ளார். அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார்.
ஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும் அளிக்கவில்லை. எத்தனை பேருக்கு எவ்வளவு தொகையை அனுப்பப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025